மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இன்று ஒத்திவைப்புவேளை பிரேரணை.!
மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இன்று ஒத்திவைப்பு வேளைப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது.
இதற்கான அறிவித்தலை கூட்டமை ப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாரா ளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ. சுமந்திரன் விடுத்துள்ளார். மேலும் தெரி விக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாத த்துடன் 3 மாகாண சபைகளின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ள நிலையில் தேர்தல் முறையில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்காக மாகாண சபை தேர்தல் சட்ட விதிகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளது.
மேற்கூறிய 3 மாகாண சபைகளினதும் தேர்தல்கள் இன்று வரை நடைபெறாதுள்ள அதேவேளை, 2018 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதத்துடன் மேலும் 3 மாகாண சபைகளின் பதவிக்காலம் முடிவடையவுள்ளதுடன் தேர்தல் சட்ட சீர் திருத்தங்கள் இன்னும் முடிவடையாதுள்ளதால் எந்தவொரு மாகாண சபை க்கும் தேர்தலை நடத்த முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.
தேர்தல் சட்ட விதிகளின் திருத்தமானது உடனடியாக செய்து முடிக்கப்பட வேண்டிய தேவை இதனால் எழுகின்றது. இதன் மூலம் பல்வேறு மாகாணங்களைச் சேர்ந்த மக்களின் உரிமைகள் மேலும் மறுக்கப்படாமல் செய்ய முடி யும்.
மாகாண சபை தேர்தல் சட்ட விதிகளில் சீர்திருத்தத்தை உடனடியாக மேலும் தாமதமின்றி செய்து முடிக்குமாறு நாம் அரசை வலியுறுத்துகின்றோம்.
எதிர்வரும் 2 மாதங்களுக்குள் இச் சீர்திருத்தங்களை செய்யத் தவறும் பட்சத்தில் 2017 ஆம் ஆண்டு மாகாண சபை (திருத்தம்) சட்டம் இல.17 உடனடியாக நீக்கப்ப டுவதன் மூலம் தேர்தலை உடனடியாக நடத்தி முடிக்க அரசை நாங்கள் வலியுறுத்துகிறோமெனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.