ஐரோப்பிய ஒன்றியத்தின் புகலிடக் கோரிக்கையாளர்கள் விடயத்தில் மெக்ரோன் எச்சரிக்கை
ஐரோப்பிய ஒன்றியத்தின் புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பிலான திட் டம் தொடர்பில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மெக்ரோன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான முகாம்களை வட ஆபிரிக்காவில் அமைப்ப தற்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் திட்டம் செயற்படுத்தப்பட மாட்டாதெனத் தெரிவித் துள்ளாா். .
புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான தடு ப்பு முகாம்களை தமது நாடுகளில் அமைப் பதற்கு எந்தவொரு ஆபிரிக்க நாடும் இதுவரை அனுமதி வழங்கவில்லை என வும் மெக்ரோன் மேலும் தெரிவித்துள்ளார்.
வட ஆபிரிக்க நாடுகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தால் அவ்வாறு தன் னிச்சையாக முடிவெடுக்க முடியாதெனவும் அவர் கூறியுள்ளார்.
ஆபிரிக்க நாடுகளில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கான பாதுகாப்பான தடுப்பு முகாம் களை அமைப்பது தொடர்பில் இம்மாதம் கலந்துரையாடுவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தால் ஏற்கனவே தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில், இமானுவேல் மெக்ரோனின் இந்தக் கருத்து சர்ச்சையை ஏற்ப டுத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவித்துள்ளன.