Breaking News

பாலியல் குற்றச்சாட்டு தொடர்பில் மத்தியகுழு கூட்டத்தில்-சுமந்திரன்

தமிழரசு கட்சியின் கொள்கைப்பரப்பு செயலாளர் வேழமாலிதன்
தொடர்பில் வெளிவந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக மட்டக்களப்பில் நடைபெறவுள்ள கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் விவாதிக்க இருப்பதாக த.தே.கூட்டமைப்பின் பேச்சாளரும் தமிழரசு கட்சி நிர்வாக பொறுப்பாளருமான எம்.ஏ.சுமந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பலரும் அதிர்ப்தி வெளியிட்ட வேளை அதற்கு பதிலளித்துள்ள சுமந்திரன் இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்டுள்ள வேழமாலிதன் மற்றும் சிறீதரனுடன் தான் நீண்டநேரம் பேசியதாகவும் அப்படி ஒரு பெண் இருப்பதே தனக்கு தெரியாது என அவர் தெரிவித்துள்ளதாகவும் இந்த குற்றசாட்டு மட்டுமல்ல முன்னர் மக்கள் மத்தியில் பேசப்பட்ட ஏனைய குற்றசாட்டுக்கள் என்பவற்றை கவனத்தில் கொண்டே இம்முடிவை தான் எடுப்பதாகவும் சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

இதேவேளை யாராவது பாதிக்கப்பட்ட பெண்கள் ஆதாரங்கள் இருந்தால் தமிழரசுக்கட்சியின் உயர் தலைவர்களான சம்பந்தன் ஐயா போன்றவர்களிடமோ அல்லது பொலீசிலோ முறையிடுமாறும் கோரியுள்ளார்.


முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்